ஐ.சி.சி.யின் விதிமுறைகளை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனி மீறியுள்ளதாக ஐ.சி.சி. முன்வைத்த குற்றச்சாட்டை இந்திய கிரிக்கெட் சபை முற்றாக மறுத்துள்ளது.
உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக சவுதம்டனில் இடம்பெற்ற போட்டியின்போது இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் தோனி தனது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் விதமாக இந்திய இராணுவ முத்திரையை ஒத்த சின்னம் பொறிக்கப்பட்ட கையுறையை பயன்படுத்தி போட்டிகளில் பங்கேற்று விளையாடினார்.
தோனியின் இந்தச் செயலைப் பார்த்து சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டினார்கள் எனினும் இதனை கண்காணித்த ஐ.சி.சி., தோனியின் கையுறையில் இராணுவ முத்திரையை பொறித்து இருப்பது ஆட்ட விதிமுறைக்கு எதிரானதாகும். எனவே அந்த முத்திரையை அடுத்த போட்டிக்குள் அகற்றும் படி இந்திய கிரிக்கெட் சபைக்கு வேண்டுகோள் விடுத்தது.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு தலைவர் வினோத் ராய், டோனியின் கையுறையில் இருப்பது இராணுவ முத்திரை இல்லை எனவும் அதனை தோனி தொடர்ந்து பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரி ஐ.சி.சி.க்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐ.சி.சி.யின் விதிமுறைகளை தோனி மீறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM