(நெவில் அன்தனி)
சீனாவின் சொங்குவிங் வினையாட்டரங்கில் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ள இரண்டாம் கட்ட ஆசிய க்ரோன் ப்றீ மெய்வல்லுநர் போட்டிகளிலும் பதக்கங்களை வென்றெடுக்கும் குறிக்கோளுடன் இலங்கை வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.
ஜியாங்ஜின்னில் கடந்த செவ்வாயன்று நடைபெற்ற முதலாம் கட்ட க்ரோன் ப்றீ மெய்வல்லுநர் போட்டிகளில் நான்கு பதக்கங்களை வென்றெடுத்த இலங்கை, இரண்டாம் கட்டத்தில் அதனைவிட குறைந்தது மேலும் இரண்டு பதக்கங்களை வெல்வதற்கு முயற்சிக்கும் என மெய்வல்லுநர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
கத்தாரில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளில் விதூஷா லக்ஷானி மூலம் ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்ற இலங்கை, சீன க்ரோன் ப்றீ மெய்வல்லுநர் போட்டிகளின் முதலாம் கட்ட 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றமை ஓரளவு திருப்தி தருவதாக இலங்கை மெய்வல்லநர் சங்கத் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ திருப்தி வெளியிட்டார்.
இலங்கை மெய்வல்லுநர்கள் இன்னும் அதிக முயற்சியுடன் போட்டியில் இன்றைய இரண்டாம் கட்டப் போட்டியில் பதக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடியதாக இருக்கும் என்றார் அவர். எனினும் சீனா போன்ற நாடுகளில் ஏனைய ஆசிய நாட்டவர்களுடன் போட்டியிட்டு வெற்றிபெறுவது இலகுவானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜியாங்ஜின்னில் செவ்வாயன்று நடைபெற்ற முதலாம் கட்ட ஆசிய க்ரோன் ப்றீ மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை சார்காக மூன்று பெண்களும் ஒரு ஆணும் பதக்கங்களை வென்றெடுத்தனர்.
பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நதிஷா ராமநாயக்க (53.24 செக்.), நிமாலி லியனஆராச்சி (2 நி. 03.17 செக்.) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் கயன்திகா அபேரட்ன (2 நி. 03.47 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக் வீரர் சுமேத ரணசிங்க (76.92 மீ.) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.
ஆசிய க்ரோன் ப்றீ மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றிய ஏனையவர்ககளில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அஜத் ப்ரேமகுமார (46.69 செக்.) நான்காம் இடத்தையும் முப்பாய்ச்சலில் க்ரேஷான் தனஞ்சய (16.02 மீ.)ஆறாம் இடத்தையும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ருசிறு சத்துரங்க (1 நி. 56.27 செக்.) ஆறாம் இடத்தையும் பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தாரிக்கா பெர்னாண்டோ (14.28 மீ.) ஐந்தாம் இடத்தையும் உயரம் பாய்தலில் துலாஞ்சலி ரணசிங்க (1.70 மீ.) ஏழாம் இடத்தையும் பெற்றனர்.
இவர்கள் அனைவருமே இன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட க்ரோன் ப்றீ மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM