வீரகேசரி பத்திரிகை யில் 53 வருட காலம் கண்டி மாவட்டத்தின் பிராந்திய சிரேஷ்ட ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த க.ப.சிவம் தனது 86 ஆவது வயதில் நேற்று காலமானார்.
கடந்த சில வாரங்களாக சுகயீனமுற்ற நிலையில், கண்டி வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று பகல் காலமானார். பிரபல வர்த்தகர்காலஞ்சென்ற கருப்பண்ணபிள்ளையின் புதல்வரான சிவம், தமது ஆரம்பக் கல்வியை அம்பிட்டிய பெர்வட்ஸ் கல்லூரியிலும், உயர் கல்வியை கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியிலும் கற்றார்.
பாடசாலைகளில் கல்வி கற்கின்ற காலத்திலேயே தமிழ் மொழிக்கும், மலையக வாழ் மக்களுக்கும் உரிமை வேண்டும் என குரல் எழுப்பி வந்தார். மலையக சமூகத்தின் விடிவுக்காக 'மலை முரசு' என்ற சஞ்சிகையை வெளியிட்டு வந்தார்.
1966 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் இணைந்துகொண்ட இவர், இறக்கும் வரை பிராந்திய ஊடகவியலாளராக வாழ்ந்து வந்தார். சமாதான நீதிவானாகிய இவர், இரத்தின தீபம், கலாபூஷணம், தமிழ் மணி, பேராதனை பல்கலைகழக தமிழ் மன்றத்தின் 'தங்கச் சான்றோன்', மத்திய மாகாண தமிழ் கல்வி இந்து கலாசார அமைச்சினால் மூன்று முறை தமிழ் சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர் பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM