(ஆர்.யசி)
11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸ் அதிகாரியான நிஷாந்த டி சில்வாவை இடமாற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அழுத்தங்களை கொடுத்தார், இது குறித்து பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் முரண்பட்ட காரணத்தினால் என்னை பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் இருந்து நீக்கினர் என கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவிக்கின்றார்.
ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்
பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் நான் பங்குபற்றக் கூடாது என ஜனாதிபதி தெரிவித்ததாக எனக்கு பாதுகாப்பு செயலாளர் அறிவித்ததை அடுத்து நான் பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. என்மீது இருந்த அவநம்பிக்கை இதற்கு காரணமாக இருக்கும். ஆனால் இறுதியாக ஒரு பாதுகப்புக் கூட்டத்தில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் அரச புலனாய்வு அதிகாரி நிஷாந்த டி சில்வா விசாரணைகளை முன்னெடுத்திருந்தார். அவர் அந்த விசாரணைகளை நிறுத்த வேண்டும் எனவும் இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் ஜனாதிபதியும் தெரிவித்தனர்.
எனினும் எனக்கு இதில் உடன்பாடு இருக்கவில்லை. பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் இது குறித்து நான் காரணிகளை எழுப்பினேன். எனினும் என்னை கடமையை செய்ய பணித்தனர்.
எனவே கட்டயதனின் பெயரில் நான் அதற்கு இணங்கினேன். பின்னர் அது நடக்கவில்லை. ஆனால் நான் பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள கூடாது என்ற காரணி இதன் பின்னரே எழுந்தது. ஜனாதிபதியே என்னை பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டாம் என பணித்தார் என அவர் சாட்சியமளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM