இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நஷ்டஈடுகள் வழங்கப்படவில்லையென கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் டேவிட் மக்னொன் இன்று முன்னாள் வடமாகாண மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரனை சந்தித்தார்.
குறித்த சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி சோலைவனம் கொட்டலில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதாக அனந்தி சசிதரன் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன்,
இறுதி யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு நஷ்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களிற்கு எந்தவொரு நட்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை. ரணில் அரசு இன ரீதியில் வெவ்வேறான பார்வையையே கொண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பிணைமுறி மோசடி உள்ளிட்ட விடயங்கள் மறக்கப்பட்டுள்ளன.
முறிகள் மோசடி தொடர்பில் தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்ய முடியாத பாராளுமன்றம் உள்ள நாட்டிலேயே நாம் வாழ்கின்றோம்.
இதேவேளை முறிகள் மோசடியை மூடி மறைத்தவர்கள், அதற்கு துணைபோன அனைவரும் கூட்டுக் களவாணிகள் எனவும் அனந்தி சதிதரன் இதன்போது மேலும் கனடா நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் டேவிட் மக்னொன் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM