இந்த நாட்டிற்கு ஒரு அரசியல் தலைவரை, தேசியத் தலைவரை தேட வேண்டும். இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் சரியான முறையில் வாக்களிக்காவிட்டால் நாங்கள் 2005 ஆம் ஆண்டு விட்ட பிழையை மீண்டும் இன்னொரு இடத்திலே சந்திக்க வேண்டிவரும்.
2005 ஆம் ஆண்டு நாம் ஓர் சரியான முடிவு எடுக்காததன் காரணமாகத்தான் சகல உறவுகளும், தமது உடைமைகளை இழந்து நிற்கதியாக நிற்கிறோம்.
என கல்வி இராஜங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை (05) பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 1579 சமூர்த்திப் பயனாளிகளுக்கு சமூர்த்தி உரித்து வழங்கும் நிகழ்வு புற்றளை கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
அங்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தித் திட்டத்தில் கடந்த காலங்களில் இருந்து பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. கொடுத்ததை வெட்டிய நிலையில் அதை நாம் தடுத்து நிறுத்தினோம். மாற்று வாக்குகளை போட்டதன் காரணமாக வேறு வழிகளில் ஊடுருவி அவற்றை நிறுத்திய வரலாறுகள் கடந்த காலங்களில் இருந்தது.
சந்திரிகா ,மகிந்த ஆகியோர் இரண்டு தடவைகள் ஜனாதிபதி ஆவதற்கு வாக்களித்ததன் காரணமாக தமிழ் ஆயுதக் குழுக்களிற்கு பின்னாலே விலை போனார்கள். ஏனெனில் நீங்கள் அவர்களுக்கு அளித்த வாக்குகளால் வெள்ளை வேன் கலாசாரம் , காணாமல் போனவர்கள், ஏதோ ஒரு காரணத்தை வைத்து அவர்கள் இல்லாது ஒழிக்கப்பட்டார்கள்.
இறுதி யுத்தத்தை கொண்டுவருவதற்காக அரசாங்கத்திற்கு துணை போனார்கள், காட்டிக் கொடுத்தார்கள் இப்படி எத்தனையோ வழிகளில் தீங்கு செய்தார்கள். இறுதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்வதற்காக உதவி செய்தார்கள்.
எமது அரசாங்கம் 22 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு மாகாணத்தில் கூடுதலானவர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
சமூர்த்தி திட்டப் பயனாளிகளை எப்படி தெரிவு செய்தீர்களோ அதே போல பட்டதாரிகள் விடயத்தில் விஷேட கவனம் செலுத்தி நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு தயாராகிக் கொண்டிருக்கிறது. வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது. அது திறைவடைந்ததன் பின்னர் நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளது, எனத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM