அக்குரஸ்ஸ தலககம பகுதியில் மூன்று பேர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவுட்குட்டபட்ட தலககம பகுதியில் நேற்று முற்பகல் 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்தப் பகுதியில் மிருக வேட்டைக்காக அனுமதியின்றி எடுக்கப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கியே இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிடனர்.
தலஹகம பிரதேசத்தைச் சேர்ந்த பாமன்வெல்ல ,வெலயத்தர கெதர மற்றும் வெல்கடவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 45 வயதுடைய கமகே அமர , 56 வயதுடைய விக்ரமகே சந்ரதாச மற்றும் 76 வயதுடைய மதரசிங்ஹகே டேவிட் எனப்படும் மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அக்குரெஸ்ஸ பொலிஸார் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசாதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM