திவுலப்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக்குறித்த விபத்தானது நேற்று செவ்வாய்கிழமை இரவு 08.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திவுலப்பிடிய - நீர்கொழும்பு பிரதான வீதியில் நீர்கொழும்பு நோக்கி சென்ற வாகனம் வீதி ஓரத்தில் சென்ற நபர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது பலத்த காயங்களுக்குள்ளான பாதசாரி திவுலப்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவர் திவுலப்பிடிய பகுதியை சேர்ந்த 67 வயதுடைய ஹீன்கெந்த முதலிகே ரத்னபால என விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
விபத்தினை ஏற்படுத்திய வாகனம் குறித்த தகவல்கள் தெரியாத நிலையில் வீதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி கேமராவின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM