திவுலப்பிட்டிய விபத்தில் பாதசாரி ஒருவர் பலி

Published By: Digital Desk 3

05 Jun, 2019 | 04:00 PM
image

திவுலப்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக்குறித்த விபத்தானது  நேற்று செவ்வாய்கிழமை இரவு 08.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

திவுலப்பிடிய - நீர்கொழும்பு பிரதான வீதியில் நீர்கொழும்பு நோக்கி சென்ற வாகனம் வீதி ஓரத்தில் சென்ற நபர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது பலத்த காயங்களுக்குள்ளான பாதசாரி திவுலப்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவர் திவுலப்பிடிய பகுதியை சேர்ந்த 67 வயதுடைய ஹீன்கெந்த முதலிகே ரத்னபால என விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

விபத்தினை ஏற்படுத்திய வாகனம் குறித்த தகவல்கள் தெரியாத நிலையில் வீதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி கேமராவின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47