(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையை வெளிநாடுகளுக்கு வழங்குவதால் துறைமுகத்தில் பணி புரியும் 10ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களின் தொழில்வாய்ப்பு இல்லாமல்போகும் அபாயமுள்ளது. இதுதொடர்பில் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற்கட்டளை 27/2 இன் கீழ் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,கொழும்பு துறைமுகத்தின் முக்கியமான தொகுதியான பாரியளவில் கப்பல்கள் வந்து நிறுத்தும்வகையில் 2015இல் புதுப்பிக்கப்பட்டதுமான, இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான கிழக்கு இறங்குதுறையை இந்தியா மற்றும் ஜப்பானுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் கடந்த 28ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த இறங்குதுறையை இலங்கை துறைமுக அதிகாரசபை கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை வங்கியின் 80 டொலர் மில்லியன் கடன் தொகையைப் பெற்று புதுப்பித்திருந்தது.
இறங்குதுறையின் வேலைத்திட்டத்தை நிறைவுசெய்த பின்னர், அதன் மூலம் லாபமீட்டும் நடவடிக்கை தொடர்பாக துறைமுக தொழிற்சங்கங்களினால் அரசாங்கத்துக்கு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. என்றாலும் அரசாங்கம் அந்த பிரேரணைகள் எதனையும் கருத்திற்கொள்ளவில்லை. குறிப்பாக இந்த பிரேரணைகளை அடிப்படையாகக்கொண்டு முன்னாள் துறைமுக அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பிரேரணை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் இதனை அரசாங்கம் இரகசியமாக இரண்டு நாடுகளுக்கு வழங்க தீர்மானித்திருக்கின்றது. கடந்த 28ஆம் திகதி அவசரமாக இந்திய உயர் ஸ்தானிகர், ஜப்பான் தூதுவர் மற்றும் துறைமுக அமைச்சர் ஆகியோரினால் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அதன் நிர்வாகம் அந்த நாடுகளுக்கு உரித்தாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் மோடி மீண்டும் பிரதமர் பதவிக்கு வருவது உறுதியான நிலையில் இந்தியாவின் அழுத்தத்தின் பின்னணியிலேயே அரசாங்கம் இந்த அவசர புரிந்துணர்வுக்கு வர தீர்மானித்தது. புதிய லிபரல்வாத பொருளாதார முறைமையை முன்னுக்கு கொண்டுசெல்ல, எந்த பெயரிலேனும் இயற்கை வளம் மற்றும் அரச சொத்துக்களின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதன்றி அரசாங்கத்துக்கு வேறு வழியில்லை.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையை வெளிநாட்டுக்கு வழங்குவதன் மூலம் துறைமுகத்தில் பணி புரியும் சுமார் 10ஆயிரம் ஊழியர்களின் தொழில் இல்லாமல்போகும் அபாயம் இருப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் தெரிவிக்கின்றன. கொழும்பு துறைமுகம் போன்றே பொருளாதார கேந்திர நிலையங்களை அரச உரிமையை விட்டுவிடுவது நாட்டின் பொருளாதார சுயாதீனத் தன்மையை காட்டிக்கொடுப்பதாகும்.
சீனா கொழும்பு துறைமுகத்துக்கு நெருக்கமாக நிலைகொண்டுள்ளதால் இந்தியாவுக்கும் அங்கு நிலை கொள்ள வேண்டிய பாரிய தேவை இருப்பது தெளிவாகின்றது. அரசாங்கம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதன் மூலம், முன்னர் இருந்த நிலைமையிலிருந்து விலகி தரகுப்பணம் எடுப்பதாக தெரிவிக்க முடியும். குறிப்பாக நாட்டு மக்களின் கவனம் வேறு திசைக்கு சென்றிருக்கும் நிலையில் அரசாங்கம் மக்களுக்கு இரகசியமாக அவசரமாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு சென்றிருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM