இங்கிலாந்தின் கார்டீப் மைதானத்தில் இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்றைய தினம் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று கார்டீப் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 34 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.
இதுவே இந்த மைதனாத்தில் இலங்கை அணி பெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் முதல் வெற்றியாகும்.
இதற்கு முன்னர் கார்டீப் மைதானத்தில் ஐந்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இலங்கை அணியானது 5 போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவியிருந்தது. அது மாத்திரமன்றி கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியிருந்தது.
இந் நிலையில் இம் மைதானத்தில் நேற்றைய தினம் 6 ஆவது ஒருநாள் போட்டியை எதிர்கொண்ட இலங்கை அணி ஆப்கானிஸ்தனை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
கார்டீப் மைதானத்தில் இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களாக 236 ஓட்டங்களையும் (2017 - பாகிஸ்தான்), குறைந்த ஓட்டங்களாக 136 ஓட்டங்களையும் (2019 - நியூஸிலாந்து) பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM