லசித் மலிங்க ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்றைய தினம் இங்கிலாந்தின் கார்டீப்பில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி வீரர்களின் அபார பந்து வீச்சினால் 34 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றிபெற்றது.
இப் போட்டியில் 6.4 ஓவர்கள் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட மலிங்க யோக்கர் மூலம் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் 43 விக்கெட்டுக்களுடன் 7 ஆவது இடத்தில் இருந்த லசித் மலிங்க இந்த மூன்று விக்கெட்டின் மூலம் மொத்தமாக 46 விக்கெட்டுக்களை கைப்பற்றி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
எனவே லசித் மலிங்க இதற்கு முனனர் 44 விக்கெட்டுக்களுடன் ஐந்தாவது, ஆறாவது இடத்தில் இருந்த இந்திய அணி வீரர்களான சகீர்கான் மற்றும் ஜவகல் சிறிநாத் ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
இப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி வீரர் கிளேன் மெக்ராத் 39 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்திலும், முத்தையா முரளிதரன் 40 போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுக்களுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி வீரர் வஸிம் அக்ரம் 38 போட்டிகளில் விளையாடி 55 விக்கெட்டுக்களுடன் மூன்றாவது இடத்திலும், சமிந்த வாஸ் 31 போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுக்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
அத்துடன் இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்னும் 10 விக்கெட்டுக்களை லசித் மலிங்க கைப்பற்றினால் பட்டியலில் நான்காவது இடத்திலுள்ள சமிந்த வாஸையும், வஸிம் அக்ரமையும் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திக்கு முன்னேறும் வாய்ப்பினை பெறலாம். ஆனாலும் இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரே லசித் மாலிங்கவின் இறுதி உலகக் கிண்ணத் தொடராகும்.
இதுவரை மொத்தமாக 220 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மலிங்க 325 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM