ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - நுவெரலியா பிரதான வீதியில் இன்று காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு அவிசாவளையிலிருந்து நுவரெலியாவை நோக்கி சிறுவர்களை ஏற்றிச் சென்ற குறித்த பஸ் ஹட்டன் குடாகம பகுதியில் தேநீர் பருகுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த பஸ்ஸில் இருந்து சிறுமி ஒருவர் இறங்கி வீதியை கடக்க முயன்ற வேளையில் மேற்படி சிறுமி குடாகம பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்களில் மோதுண்டுள்ளார்.
இவ்வேளையில் பலத்த காயங்களுக்குள்ளான சிறுமி ஏனையவர்களின் உதவியுடன் கொட்டகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM