ஆப்கானிஸ்தான் அணியுடனான வெற்றி ஒருநாள் இலங்கையின் தலைவிதியை மாற்றும் என அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அணியின் வெற்றிக்கு பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எங்களிற்கு வெற்றியொன்று அவசியமாகயிருந்தது,சமீபத்தில் நாங்கள் வெற்றிகளை அனுபவிக்கவில்லை அதனால் இந்த வெற்றி எங்களிற்கு மிகவும் அவசியமானதாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி போதுமான ஓட்டங்களை பெறவில்லை என்ற போதிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள் என எதிர்பார்த்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெற்றிவாய்ப்பை நுவான் பிரதீப் தனியொரு பந்து வீச்சாளராக காப்பாற்றிக்கொண்டிருந்தார் என தெரிவித்துள்ள சண்டிக ஹதுருசிங்க மலிங்க தான் நம்புகின்ற விடயங்களை தனது கருத்தா வெளியிட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெற்றிக்கு பின்னர் அனைத்து வீரர்களும் அதிக நம்பிக்கையை பெறுவார்கள் எனவும் சண்டிக ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM