பாராளுமன்ற உறுப்பினர்கள் 150 பேரின் கையொப்பங்களை பெற்று பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான பிரேரணையொன்றை அடுத்தமாதம் அளவில் மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவரவுள்ளது.
முதலில் இந்த யோசனையை முன்வைக்கவுள்ள ஜே.வி.பி.யினர் அது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவையும் கோருவார்கள் என தெரிகிறது. தற்போதைய எட்டாவது பாராளுமன்றம் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைகின்றது. எனினும் அடுத்த வருடம் மார்ச் மாதத்துடன் எட்டாவது பாராளுமன்றத்தின் நான்கரை வருடங்கள் பூர்த்தி அடைவதால் அதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியும்.
அதற்கு இன்னும் ஒன்பது மாதங்கள் எஞ்சியிருக்கின்ற நிலையிலேயே பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி முன்வைக்கவுள்ளது. எனினும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 150 பேர் இணக்கம் தெரிவித்து கைச்சாத்திட்டால் பாராளுமன்றத் தேர்தலை உடனடியாக நடத்த முடியும் என்பதே 19 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏற்பாடாகும்.
"தற்போதைய அரசாங்கத்திற்கு தொட ர்ந்தும் பதவியில் இருக்கும் தகுதி இல்லை இவ்வாறு பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான பிரேரணையை கொண்டுவரவுள்ளோம் "என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
தற்போதைய சூழலில் உடனடியாக பாராளுமன்றத்தை கலைப்பதற்கு மஹிந்த ராஜபக் ஷ தரப்பு ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுதந்திரக்கட்சியும் அதற்கு ஆதரவு வழங்கலாம் என்றே தெரிகிறது. எனினும் ஐக்கிய தேசியக்கட்சி எவ்வாறான முடிவை எடுக்கும் என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது.
இந்த நிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் பிரேரணை அடுத்தமாதம் அளவில் வரவிருக்கிறது. இதேவேளை இவ்வருடம் டிசம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவேண்டிய தேவை காணப்படும் நிலையில் அதற்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கே இந்த முயற்சி எடுக்கப்படுகிறது. இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பித்துள்ள நிலையிலேயே தற்போது 150 பேரின் ஆதரவுடன் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கான ஏற்பாட்டை முன்னெடுக்கவுள்ளது.
19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்பதாக பாராளுமன்றத்தை ஒருவருடத்தின் பின்னர் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது.
எனினும் 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அந்த அதிகாரம் நீக்கப்பட்டதுடன் நான்கரை வருடங்களின் பின்னரே பாராளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்கமுடியும் என்ற ஏற்பாடு கொண்டுவரப்பட்டது.
எனினும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட வர்த்தமானி அறிவித் தல் ஊடாக பாராளுமன்றத்தை கலைத்திருந் தார்.
எனினும் அதற்கு எதிராக அரசியல் கட்சிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக் கல் செய்த நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தமை சட்டத் திற்கு விரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM