உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் முஸ்லிம் மக்கள் நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில் இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறுதினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையில் முஸ்லிம்கள் அச்ச உணர்வுடன் இருந்த போதிலும் இன்றையதினம் நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் நோன்புப் பெருநாளை அமைதியான முறையில் நோன்புப் பெருநாளை முன்னெடுக்குமாறும் பொதுவெளிகளில் நோன்புப் பெருநாள் தொழுகை முன்னெடுப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் நோன்புப் பெருநாள் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாவில் நோன்புபெருநாள் தொழுகை
வவுனியா தௌஹீத் ஜமாத்தின் ஏற்பாட்டில் புனித நோன்பு பெருநாள் திடல் தொழுகை வவுனியா பட்டானிச்சூர் குடா வயல் திடலில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
அதன் தலைவர் மௌலவி எம். எப். சாபிக்கின் (பாரி) தலைமையில் தொழுகைகள் இடம்பெற்றது.
இதன்போது நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாளிகைக்காடு, சாய்ந்தமருதில் நோன்புப்பெருநாள் தொழுகை
மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் வழமைபோன்று இம்முறையும் நோன்புப்பெருநாள் தொழுகையும், பெருநாள் குத்பாவும் இடம்பெற்றது.
அசாதாரண சூழ்நிலையிலிருந்து நாடு வழமைக்கு திரும்பியதன் பின்னர் முஸ்லிம்கள் அதிகமாக கூடும் நிகழ்வு என்பதால் சம்மாந்துறை பொலிஸ் இருவர் இன்றைய தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்றைய பெருநாள் தொழுகை மற்றும் குத்பாவில் கலந்து கொள்ள வழமைபோன்று சாய்ந்தமருது மாளிகைக்காடு பொதுமக்கள் ஆவலுடன் கலந்துகொண்டிருந்தனர்.
அந் நூர் ஜும்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் ஏ.ஆர்.எம். சப்ராஸ் பெருநாள் தொழுகையையும் குத்பா உரையையும் நிகழ்த்தினார்.
மேலதிக செய்திகளுக்கு ஒரே தினத்தில் பெருநாளைக் கொண்டாட வேண்டும்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM