இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கும் மாலைதீவுக்கும் மேற்கொள்ளவிருக்கும் விஜயங்கள் 'அயலகத்திற்கு முதலிடம்" என்ற கொள்கைக்கும், 'பிராந்தியத்திலுள்ள சகலருக்கும் பாதுகாப்பும் அபிவிருத்தியும்" என்ற கோட்பாட்டிற்கும் இந்தியா வழங்கும் முன்னுரிமையை வெளிக்காட்டுகிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது.
மாலைதீவு ஜனாதிபதி இப்ரஹீம் மொஹமட் சோலியின் அழைப்பின் பேரில் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி மாலைதீவிற்கு அரசமுறை விஜயமொன்றைச் செய்யவிருக்கிறார் என்று வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது.
இரண்டாவது பதவிக்காலத்திற்கு பிரதமாக மோடி தெரிவு செய்யப்பட்ட பின்னர் வெளிநாட்டிற்கு அவர் மேற்கொள்ளவிருக்கும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
இந்தியாவிற்கும் மாலைதீவிற்கும் இடையில் உயர்மட்டத்திலான பரிமாற்றங்களில் காணப்படக்கூடியதாக இருக்கும் புதிய உத்வேகத்தை இது பிரதிபலிக்கிறது.ஜனாதிபதி சோலி கடந்த வருடம் டிசம்பரில் இந்தியாவிற்கு அரசமுறை வியமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான விசேட உறவை மேலும் வலுப்படுத்தும் குறிக்கோளுடன் பரஸ்பர நலன்களுக்குரிய விவகாரங்களில் கருத்துப் பரிமாற்றங்களையும், இருதரப்பு உறவுகளில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மேம்பாடுகளையும் ஆராய்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை இந்த விஜயம் வழங்குகின்றது என்று இந்திய வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது.
அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமைப்பை ஏற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கும் மோடி விஜயம் செய்யவிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM