அ.தி.மு.க. வேட்பாளர்கள் 233 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 227 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், 7 தொகுதிகளில் அ.தி.மு.க. தோழமைக் கட்சிகளும் போட்டியிடுகின்றன.
முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த திங்கட்கிழமை மனு தாக்கல் செய்தார். அன்றைய தினத்திலேயே 233 தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் யாரும் அன்றைய தினம் மனுத் தாக்கல் செய்யவில்லை.
இதனிடையே, அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 233 தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் நேற்று 28 ஆம் திகதி மதியம் 12.50 மணி முதல் 1.20 மணி-க்குள் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை அறிவுறுத்தியிருந்தது. மதியம் 12.50 மணியிலிருந்து 1.20 மணி வரை குரு ஹோரை உச்சத்தில் இருப்பதால் அந்த இடைப்பட்ட நேரத்தில் 233 அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களும், மாற்று வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந் தது.
அதற்கு வசதியாக 233 வேட்பாளர்களுக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ கடிதம் நேற்று வழங்கப்பட்டது. மற்ற ஆவணங்கள் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஒருங்கிணைத்து அ.தி.மு.க. வேட்பாளர்கள் 226 பேரும், கூட்டணி வேட்பாளர்கள் 7 பேரும் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM