இந்தியாவின் அசாம் மாநிலத்தில் எட்டு விமான ஊழியர்கள் மற்றும் ஐந்து பயணிகளுடன் காணாமல் போயுள்ள இந்திய விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் அசாம் மாநிலம், ஜோர்கத் தளத்திலிருந்து நேற்று மதியம் 12.25 மணியளவில் புறப்பட்டு சென்ற என்டோனோவ் எ.என்- 32 ரக விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
மேலும் குறித்த விமானம் நேற்று மதியம் 1மணியளவில் அருணாசல பிரதேசம்- மென் சுக்கா என்னும் இடத்தில் சென்றபோது, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது ஆனால் இதுவரையும் விமானம் குறித்த எந்ததொரு தகவலும் கிடைக்கவில்லையென இந்திய பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் 13 பேருடன் காணாமல் போன குறித்த இந்திய விமானத்தை தேடும் பணியில், விமானப்படை மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தேடுதல் பணியை தீவிரப்படுத்துவதற்காக C-130J என்ற விமானப்படை விமானமும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM