பத்திரிகைகளில் ஆசிரியர் தலையங்கம் என்பது கௌரவத்திற்குரியதாகும். எனவே அதில் உண்மைத் தன்மையும் தரவுகளும் இருக்க வேண்டும். பொய்யான “மேதாவிக்” கருத்துக்களால் அதன் கௌரவம் பாதிக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்ன விவசாய நிலங்களில் வைக்கப்பட்டுள்ள “வைக்கோல்" பொம்மைகள் போன்று தாதியர் சங்கங்கள் தலைதூக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கையில் அரச மருத்துவ மனைகளில் 1400 மருந்து வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
நாட்டில் இன்று அனைத்து அத்தியாவசிய மருந்து வகைகளும் உள்ளன. 16 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இவை அத்தியாவசியமான மருந்துகள் அல்ல.
அத்தோடு புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்து வகைகள் அதிக விலைகூடியவை. அவை தொடர்பில் அந்நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி விலைகுறைக்கப்பட்டு கொள்வனவு செய்யப்படுகின்றன. அத்தோடு முதல் தர மருந்து வகை உற்பத்திக்கு ஏற்ற வகையில் வேறு மருந்துகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
எனவே அவற்றை கொள்வனவு செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
இவ்வாறானதோர் நிலையில் தான் மருந்து வகைகள் தொடர்பில் பெயர்ப்பலகைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட தாதியர் சங்கங்கள் என்று கூறிக் கொள்வோரின் பேச்சுக்களையும் தகவல்களையும் கேட்டு பத்திரிகைகளில் பிழையான செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன.
செய்திகளை விட ஆசிரியர் தலையங்கங்களும் எழுதப்படுகின்றன. இது மிகவும் கவலைக்குரியதாகும்.
பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கமென்பது கௌரவத்துக்குரியதாகும். அதற்கென தனித்துவம் உள்ளது.
ஆசிரியர் தலையங்கத்தை பார்த்துத் தான் பத்திரிகையின் தரம் எடைபோடப்படும். எனவே பத்திரிகையில் ஆசிரியர் தலையங்கமானது உண்மை தகவல்களுடன் சரியான தரவுகளுடன் எழுதப்பட வேண்டும்.
மருந்து வகைகளின் விலைகள், அவற்றின் தரம் குறித்து சேனக பிபிலவின் கொள்கைகளை கூட அறிந்திருக்காதவர்களே கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
விவசாய நிலங்களில் விவசாயிகள் வேலை செய்வார்கள். அதே நிலங்களில் வைக்கோல் பொம்மைகளும் இருக்கும்.
அந்த வைக்கோல் பொம்மைகளைப் போன்ற தாதியர் சங்கங்களின் பொய்களைக் கேட்டு செய்திகள் எழுதப்படுகின்றன என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM