வவுனியா புதூர் பகுதியில் வாகன விபத்தொன்றில் சிக்கி மூவர் காயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில் இரவு 7.40 மணியளவில் ஆலயத்திற்கு செல்லும் வீதியில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியொன்றுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபர் படுகாயமடைந்த நிலையிலும் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணொருவர் உட்பட இருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மதுபோதையில் இருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தள்ள நிலையில் விபத்து குறித்து புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நோயாளர் காவு வண்டி சேவையின் துரித சேவையின் காரணமாகவே காயமடைந்தவர்கள் விரைவாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடிந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM