கண்டியில் இன்று நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டுவரும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவித்து மொரட்டுவை ரயில் நிலையம் முன்பாக மக்கள் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதிவியிலிருந்து ஜனாதிபதி விலக்க வேண்டும் அல்லது அவர்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் எனக் கோரியும் அவர்களை குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்குட்படுத்த வேண்டும் எனக் கோரியும் கண்டியில் அதுரலிய ரத்ன தேரர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து ( 31.05.2019 )உண்ணாவிரதப் போராட்டத்திலீடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து மொரட்டுவை ரயில் நிலையத்திற்கு மக்கள் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையால் மொரட்டுவை நகரின் காலி வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக புதிய காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM