அரசுப் பதவி வகிக்கும் 3 இஸ்லாமியர்களை பதவி நீக்கக் கோரி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக அதுரலிய ரத்ன தேரர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஹட்டன் நீக்ரோதாரம விகாரையின் தலைமை விகாராதிபதி தலைமையில் இன்று காலை ஆதரவு பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
இந்த பேரணியில் ஹட்டன் பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் மத வேறுபாடுகளின்றி பங்குபற்றியதுடன் மத சார்பற்று மத குருமார்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது காலை 10 மணியளவில் ஹட்டன் நகரில் உள்ள நீக்ரோதாராம விகாரையிலிருந்து பேரணி ஆரம்பமாகி ஹட்டன் பஸ் நிலையம் வரை சென்று பின் விகாரையை நோக்கி பயணித்த பேரணி ஹட்டன் மத்திய மணிக்கூட்டுக்கு அருகில் உள்ள புத்தரின் உருவசிலைக்கு மலர்கள் வைத்து உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் அதுரலிய ரத்ன தேரருக்கு ஆசி வேண்டி விசேட வழிபாட்டையும் மேற்கொண்டனர்.
அத்துடன், இப்பேரணிக்கு வலு சேர்க்கும் வகையில் ஹட்டன் நகரலில் சிலர் தமது வியாபார ஸ்தலங்களை மூடியிருந்தமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM