வவுனியா அட்டமஸ்கட பகுதியிலிருந்து வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக மாமடு பொலிசார் இன்று காலை தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை வவுனியா அட்டமஸ்கட பகுதியிலுள்ள குளத்திற்கு அருகிலுள்ள மரப் பொந்தில் பொதி ஒன்று காணப்படுவதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சென்ற பொலிசார் அங்கு காணப்பட்ட பொதியை சோதனை செய்த போது அப் பொதியில் பல வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளது.
எஸ்.எல்.ஆர் மகசீன் 2, எஸ்.எல்.எல் தோட்டாக்கள் 08, ரி. 56 ரக தோட்டாக்கள் 02, என்பன மீட்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் குறித்த வெடிபொருட்கள் எவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளது இதை யார் கொண்டு வந்தார் போன்ற விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்றைய தினம் நீதிமன்ற அனுமதியுடன் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் மாமடு பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM