12 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி 21 ஓட்டத்தினால் தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 330 ஓட்டங்களை குவித்தது.
இந்த ஓட்டமே பங்களாதேஷ் அணி இதுவரை பெற்றுக்கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டம் ஆகும்.
இதற்கு முன்னர் பங்களாதேஷ் அணி கடந்த 2005 ஆம் ஆண்டு டாக்காவில் பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற ஆட்டத்தில் 329 ஓட்டத்தையும், 2014 ஆம் ஆண்டிலும் டாக்காவில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 326 ஓட்டத்தையும், 2017 ஆம் ஆண்டு தம்புள்ளையில் இடம்பெற்ற ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக 324 ஓட்டத்தையும், 2015 ஆம் ஆண்டு நெல்சனில் இடம்பெற்ற ஆட்டத்தில் ஸ்கெட்லாந்துக்கு எதிராக 322 ஓட்டத்தையும் குவித்துள்ளது.
இந்நிலையிலேயே பங்களாதேஷ் அணி நேற்று தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களை பதிவுசெய்துள்ளது.
இதேவேளை, ஒரு நாள் போட்டியொன்றில் இங்கிலாந்து அணியே அதி கூடிய ஓட்டங்களைப்பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி நொட்டிங்கமில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 481 ஓட்டங்களை பெற்றது. இதுவே இதுவரை பெறப்பட்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக்கூடிய ஓட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM