(செ.தேன்மொழி)
வெலிகம பகுதியின் ஆறொன்றில் பாய்ந்து இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெனிபிடிய - பொல்வத்துமோதர ஆற்றில் வீழ்ந்து நபரொருவர் நீரில்மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன் பின்னரம் பொலிஸாரும் கடற்படையின் சுழியோடிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் காணாமல்போன நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளில் வெல்லான பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய வன்னியாரச்சிகே சுபுன் புத்திக எனப்படும் இராணுவ சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM