ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெறும் 5 ஆவது போட்டியில் டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா மற்றும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் ஓவல் மைதமானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
தென்னாபிரிக்கா அணி தான் எதிர்கொண்ட முதலாவது போட்டியில் இங்கிலாந்திட்டம் 104 ஓட்டத்தனால் படுதோல்வியடைந்தது. அதேபோன்று பங்களாதேஷ் அணியும் இந்திய அணியிடம் பயிற்சிப் போட்டியில் வீழ்ந்துள்ளது.
ஆகையினால் இப் போட்டியில் இரு அணிகளும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்க அணியை 7 ஆவது இடத்தில் இருக்கும் பங்களாதேஷ் அணி சந்திக்கின்றது.
எனினும் பங்களாதேஷ் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. காரணம் கடந்த 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் சுற்று ஆட்டத்தில் 67 ஓட்டத்தினால் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தியுள்ளது.
இதுவரை இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடர் போட்டிகளில் இவ்விரு அணிகளம் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தென்னாபிரிக்கா 2 வெற்றிகளையும், பங்களாதேஷ் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM