நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் திமுத் கருணாரத்னவுடன் ஏனைய வீர்கள் கைகோர்த்து நிலைத்து நின்றாடாமையினால் இலங்கை அணி 136 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே கார்டிப்பில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கை அணிக்கு வழங்க இலங்கை அணியும் முதலில் துடுப்பெடுத்தாட ஆடுகளம் புகுந்தது.
ஆரம்ப வீரர்களாக லஹிரு திரிமான்ன மற்றும் திமுத் கருணாரத்ன களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க மாட் ஹென்றியின் முதல் பந்தினை எதிர்கொண்ட திரிமான்ன ஒரு நான்கு ஓட்டத்தை விளாசினார். எனினும் இரண்டாவது பந்தில் எல்.பி.டபிள்.யூ. முறையில் நான்கு ஓட்டத்துடனேயே அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.
2 ஆவது கிக்கெட்டுக்காக அணித் தலைவர் திமுத்துடன் இணைந்து குசல் பெரேரா ஜோடி சேர்ந்தாட இலங்கை அணி முதல் ஐந்து ஓவர்களில் 25 ஓட்டத்தை பெற்றது. இதன் பின்னர் குசல் பெரேரா அதிரடி காட்ட ஆரம்பித்தவேளை அவரும் 8.1 ஆவது ஓவரில் 29 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
குசலின் வெளியேற்றத்தையடுத்து களமிறங்கிய குசல் மெண்டீஸும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கோல்டன் டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தது.
அந்த ஓவருக்குப் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட மாட் ஹென்றி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்களை சாய்த்த வேகத்தில் ஹேட்ரிக்குக்காக காத்துக் கொண்டிருந்தார். எனினும் அடுத்து களமிறங்கிய தனஞ்சிய டிசில்வா ஹென்றியின் 3 ஆவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி ஹெட்ரிக் வாய்ப்பை தகார்த்தார்.
அத்துடன் இலங்கை அணியும் 8.3 ஆவது ஓவரில் 50 ஓட்டங்களை கடந்தது. இருப்பினும் 11.5 ஆவது ஓவரில் தனஞ்சய டிசில்வா 4 ஒட்டத்துடன் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து வந்த மெத்தியூஸ் டக்கவுட் முறையிலும், ஜீவன் மெண்டீஸ் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர் (60-6).
7 ஆவது விக்கெட்டுக்காக திமுத் மற்றும் குசல் பெரேரா ஜோடி சேர்ந்தாட ஆரம்பிக்க இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து, 92 ஓட்டத்தையும், 22 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களையும் பெற்றது. (திசர பெரேரா 19, திமுத் 38).
திசர பெரேரா அடித்து ஆட ஆரம்பித்தபோது 23.4 ஆவது ஓவரில் மிட்செல் சாண்ட்னருடைய பந்து வீச்சில் 27 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து வந்த இசுறு உதான டக்கவுட் முறையிலும், சுரங்க லக்மால் 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தார்.
இதனால் இலங்கை அணி 130 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை பறிகொடுக்க, இறுதி விக்கெட்டுக்காக லசித் மலிங்க ஆடுகளம் நுழைந்தாட ஆரம்ப வீரராக களமிறங்கி அணித் தலைவர் திமுத் 28.4 ஆவது ஓவரில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
இந் நிலையில் 29.2 ஆவது ஓவரில் மலிங்க ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார், இதனால் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த நிலையில் 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. திமுத் கருணாரத்ன 52 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து அணிசார்பில் பந்து வீச்சில் மாட் ஹென்றி, லொக்கி பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், மிட்சல் சாண்டனர், கிரேண்ட்ஹோம் மற்றும் ஜேம்ஸ் நீஷம் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
Photo credit : ICC
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM