கடந்தகால மனக்கசப்புக்களை மறந்து எதிர்கால நலன் குறித்து சிந்திப்போம் - சிறிதரன்

Published By: Daya

01 Jun, 2019 | 03:59 PM
image

(நா.தனுஜா)

 நாட்டிலே ஈழத்தமிழர்களும், இஸ்லாமியத் தமிழர்களும் ஒன்றிணைந்து, கௌரவமாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எம்முடைய தேவையாக இருக்கின்றது. அதனைக் கருத்திற்கொண்டு தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் நாங்கள் தீர்மானம் எடுப்போம். கடந்தகால மனக்கசப்புக்களை மறந்துவிட்டு, எதிர்கால நலன் குறித்து சிந்திப்பதெனில் இதுவே எமது தெரிவாக இருக்கின்ற என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தமது நிலைப்பாடு என்னவென்பதை அறிவிக்கவில்லை. குறித்த விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைப் பாதுகாக்கும் விதமாக கூட்டமைப்பு செயற்படும் என்று எதிரணியினர் தெரிவித்துவரும் நிலையில், இதுபற்றி வினவிய போதே சிறிதரன் எம்.பி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இணைந்த வடக்கு – கிழக்கு என்ற வார்த்தையை நாங்கள் பயன்படுத்துகின்றோமெனில் வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்களின் ஆதரவும் எமக்கு தேவையாகும். வடக்கு, கிழக்கு மக்களின் நலனைக் கருத்திற்கொள்வதாக வெறுமனே வார்த்தைகளில் கூறிவிட்டு, முஸ்லிம் மக்கள் குறித்து சிந்திக்காமல் இருப்பது தவறாகும்.

அந்தவகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் நாங்கள் ரிஷாட் பதியுதீன் என்ற ஒரு தனிநபர் குறித்து சிந்திக்கவோ, கவனத்திற்கொள்ளவோ மாட்டோம். மாறாக அனைத்து முஸ்லிம் மக்களின் நிலை குறித்து சிந்தித்து, அவர்களின் நலன் கருதியே இவ்விடயத்தில் தீர்மானம் மேற்கொள்வோம்.

கடந்த காலங்களிலே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையே சில மனக்கசப்புக்கள் காணப்பட்டன என்பது உண்மையே. அவர்களால் எமக்கு சில தீங்கான விடயங்கள் நேர்ந்ததைப் போன்றே, எமது தரப்பாலும் அவர்களுக்கு இடம்பெற்ற அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறிருக்கையில் பழைய மனக்கசப்புக்களை இன்னமும் மனதிலிருத்தி, எரியும் நெருப்பில் குளிர்காய நாங்கள் தயாராக இல்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28