உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து சுற்றுலாத் துறை எதிர்நோக்கும் பிரச்சினை

Published By: R. Kalaichelvan

01 Jun, 2019 | 03:01 PM
image

உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஏற்பட்ட வெடி குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்துபதுளை மாவட்டத்தில் சுற்றுலாதுறை மையமாக இருந்து வந்த எல்ல பிரதேசம் தற்போது பாழடைந்த பிரதேசமாக இருந்து வருகின்றது.

குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்பு எல்ல பிரதேசம் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் பிரகாசிக்கக் கூடியதாக இருந்தது.

தற்போதைய நிலையில் எல்ல பிரதேசத்தில் எந்தவொரு வெளிநாட்டு சுற்றுலா பிரயாணியையும் காண முடியாமல் இருந்து வருகின்றது. 

இப்பிரதேசத்தில் ஆயிரத்து இருநூறு ஹோட்டல்கள் விடுதிகள் இருந்த போதிலும் தற்போது அவ் ஹோட்டல் மற்றும் விடுதிகள் ஆயிரத்து நூறு மூடப்பட்டுள்ளன. 

அத்துடன் அவ் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றிருந்த ஆயிரத்து ஐநூறு பேர் தொழில் வாய்ப்புக்களின்றி தத்தமது வாழ்வாதாரங்களை மேற்கொள்ள முடியாமல் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

 மேலும் இவ் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளை கூட்டிச் செல்லும் வழிகாட்டிகள் பலரும் தமது தொழிலை இழந்துள்ளனர். அத்துடன் இச் சுற்றுலா பிரயாணிகளுக்கான வாகன வசதிகளை ஏற்படுத்திய ஆட்டோக்கள, கார்கள்,வேன்கள் ஆகியனவற்றின் உரிமையாளர்கள் வருமானமின்றிய நிலையிலுள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் எல்ல பிரதேசத்திற்கு வராமையினால் இப் பிரதேசம் தற்போது பாழடைந்த பிரதேசமாக காட்சியளிக்கின்றது. 

எல்லை நகரமும் நகரில் இருந்து வரும் ஓரிரு ஹோட்டல்களும் விடுதிகளும் வெறிச்சோடிய நிலையிலேயே காணப்படுகின்றன. இந்நிலை தொடரும் பட்சத்தில் எல்ல பிரதேச மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிடுமென்று பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். 

எல்ல பிரதேச மக்கள் சுற்றுலா பிரயாணிகளின் வருகையினாலேயேஅவர்களின் வாழ்க்கை வளமாக இருந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 11:17:24
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47