வவுனியாவில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற சாரதியை வாகனத்துடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மரக்காரம்பளை வீதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை பின்னால் சென்ற சொகுசு வானம் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனச்சாரதி தப்பிச் சென்ற நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வாகனச் சாரதியை வாகனத்துடன் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
வவுனியா மரக்காரம்பளை வீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளிளை பின்னால் சென்ற கே.டி.எச் சொகுசு வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இதையடுத்து அப்பகுதியிலிருந்தவர்களின் உதவியுடன் படுகாமடைந்த நபரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
குறித்த வீதிகளுக்கு அண்மையில் இருந்த சி.சி.ரி காணொளி மூலம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்றைய தினம் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் சாரதியையும் கைது செய்து விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த மரக்காரம்பளை பகுதியைச் சேர்ந்த 44வயதுடைய நபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM