60 ஆண்டுகளுக்கு பின்னர் புனரமைக்கப்படும் வெள்ளவாய்கால்; 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Published By: Daya

01 Jun, 2019 | 12:08 PM
image

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இருபாலை தெற்கு கிராமசேவையாளர் பிரிவில் உள்ள ஆனந்தபுரம் கிராமத்தை ஊடறுத்து செல்லும் வெள்ளவாய்க்கால் புனரமைப்புக்கு யாழ்.கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கோப்பாய் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 15 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வெள்ளவாய்க்கால் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாமல் காணப்பட்டது.இதனால் அப்பகுதியில் வாழும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பல அசெளகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.குறிப்பாக மழைகாலங்களில். பாடசாலை செல்லும் மாணவர்கள் வயோதிபர்கள்,பெண்கள் என அனைவரும் போக்குவரத்து செய்யமுடியாத நிலைகாணப்பட்டது.

இந்நிலையில் குறித்த வெள்ளவாய்க்கால் புனரமைப்பு தொடர்பில் அப் பகுதி பிரதேச சபை உறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார் அவர்களினால் கோப்பாய் பிரதேச சபை அமர்வில் சிறப்பு பிரேரரணை கொண்டுவரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் அம்மக்களின் அவலநிலையினை கோப்பாய் பிரதேச அபிவிருத்திக்குழுத்தலைவரும் யாழ்.கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றார்.

இந்நிலையில் குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வெள்ளவாய்க்காலை பார்வையிட்டதுடன் அப்பகுதி மக்களிடம் கலந்துரையாடினார்.

பின்னர் உடனடியாக செயற்பட்ட அவர் விஷேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 15 மில்லியன் ரூபாவினை வெள்ளவாய்க்கால் புனரமைப்பிற்காக ஒதுக்கியுள்ளதுடன் உடனடியாக புனரமைப்பு வேலைகளை ஆரம்பிக்கும்படி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41