2019 உலக கிண்ண தொடரில் இலங்கை இன்று தனது முதலாவது போட்டியில் நியுசிலாந்தை எதிர்கொள்ளவுள்ள அதேவேளை இலங்கை அணியின் இரு முன்னாள் தலைவர்கள் அணி வீரர்களிற்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் அவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளனர்.
இலங்கை அணியின் தலைவர்; திமுத் கருணாரட்ண இதனை தெரிவி;த்துள்ளார்.
முன்னாள் தலைவர்களான அர்ஜூன ரணதுங்கவும் குமார் சங்ககாரவும் இலங்கை அணி வீரர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளதுடன் அவர்களிற்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் என திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
சங்ககார அணி வீரர்களிற்கு சில ஆலோசனைகளை வழங்கினார் அவை எங்களிற்கு மிகவும் பயனுள்ளவையாக அமைந்தன என திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
அவர் கடந்த உலக கிண்ணபோட்டியில் மிகச்சிறப்பாக விளையாடினார் இதன் காரணமாக இவ்வாறான போட்டிக்கு எவ்வாறு எங்களை மனோரீதியில் தயார்படுத்துவது என்ற ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக முக்கியமானதாக காணப்பட்டது என திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்
1996 இல் உலக கிண்ணத்தை கைப்பற்றிய அர்ஜூன ரணதுங்கவும் நாங்கள் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் எங்களிடம் வந்து ஆலோசனைகளை வழங்கினார் என திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
நாங்கள் துணிச்சலுடன் இருப்பதற்கு இவ்வாறான விடயங்கள் முக்கியமானவை,முன்னாள் வீரர்கள் எங்களிற்கு உதவுகி;ன்றனர், மகேல ஜெயவர்த்தனாவும் இங்கிருக்கின்றார் அவரும் எங்களிற்கு ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM