(செ.தேன்மொழி)
இறக்குவானை பகுதியில் இருவருக்கிடையில் உண்டான பணப் பிரச்சினையின் காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறக்குவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெத்தேகம , கொடகவெல பகுதியில் நேற்று வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மோதல் தொடர்பில் அயலவர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது சடலமொன்றை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் கொடகவெல - மெத்தேகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய மலவிகே சரத் தசநாயக்க என்பருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபருக்கும் குறித்த வீட்டில் வசதித்து வந்த நபருக்குமிடையில் நீண்ட நாட்களாக பணப்பிரச்சினை இருந்ததாகவும், நேற்றைய தினமும் வழமை போல் ஏற்பட்ட பிரச்சினையே மோதலாக மாறியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மோதல் வலுவடைந்த போது, சந்தேகநபரால் மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM