பலாங்கொடை, அலேபொல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து தீவைத்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
பலாங்கொடை, அலேபொல பகுதியிலுள்ள வீடொன்றுக்கு உறவினர் ஒருவர் தீவைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வீட்டில் வசித்த கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாகவே கணவனும் மனைவியும் தங்கி இருந்த குறித்த வீட்டிற்கு உறவினரொருவர் தீவைத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த வீட்டிற்கு தீவைத்த உறவினரான பலாங்கொடையைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் அந்த வீற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ வைக்கப்பட்ட வீட்டில் இருந்த கணவன், மனைவி ஆகியோர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM