மட்டு. மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு முத்திரையிடாமல் மற்றும் நிறை குறைத்த பொருட்களை விற்பனை செய்த 100 வர்த்தக நிலையங்கள் கடந்த 3 நாட்களில் சுற்றிவளைக்கபட்டன.
இவற்றுள் 27 வர்த்தகர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.
மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு நகரம், ஆரையம்பதி, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, கொக்கடிச்சோலை மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மீன்வியாபார நிலையங்கள், மீன்வாடிகள், நகைகடைகள், பேக்கரிகள், சில்லறை கடைகள், பழக்கடைகள் என்பன இச்சுற்றிவைப்பு நடவடிக்கைக்குள் அடங்கியிருந்தன.
முத்திரையிடப்படாத தராசுகளை பாவித்தமை நிறை குறைந்த பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிக்குடி நீதிமன்றங்களில் இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- ஜவ்பர்கான்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM