'தேசிய பாதுகாப்புச்சபை இரண்டு மாதங்கள் வரையில் கூடாதது பெரும் தவறு' 

Published By: Vishnu

30 May, 2019 | 04:09 PM
image

(நா.தனுஜா)

தேசிய பாதுகாப்புச்சபை இரண்டு மாதங்கள் வரையில் கூடவில்லை என்பது பெரும் தவறாகும். அதற்குப் பொறுப்பான தலைவரும்  இதுகுறித்து வெகுவாக ஆர்வம் காட்டவில்லை. அனைத்தும் மிகச் சுலபமாகக் கிடைத்துவிட்டமையே இதற்குப் பிரதான காரணம் ஆகும். அதேபோன்று இத்தகைய சூழ்நிலைகள் பற்றிய போதிய தெளிவின்மையும் காரணமாக அமைந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தேசிய பாதுகாப்புச் சபை சுமார் இரண்டு மாதங்களாகக் கூடவில்லை என்பது நகைப்பிற்குரியதாக இருக்கின்றது. நான் ஜனாதிபதி இருந்த காலத்தில் வாரத்திற்கு ஒருமுறை தேசிய பாதுகாப்புச்சபை கூடுவது வழக்கமாகக் காணப்பட்டது. அதனாலேயே யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவரவும் முடிந்தது. அக்கூட்டத்தில் யுத்தத்தின் அவ்வப்போதைய நிலை தொடர்பில் புலனாய்வுப்பிரிவினர் தகவல்களை வழங்கினார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னரும் எனது ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புச்சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெற்றது.

இவ்வாறு இரண்டு மாதங்கள் வரையில் பாதுகாப்புச்சபை கூடவில்லை என்பது பெரும் தவறாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58