ஆரம்பமாகியுள்ள சர்வதேச உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதலாவது விக்கெட்டை தென்னாபிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் கைப்பற்றியுள்ளார்.
12 ஆவது சர்வதேச உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் இன்றைய ஆரம்பப் போட்டியில் போட்டியை நடத்தும் நாடான இங்கிலாந்து அணியும் தென்னாபிரிக்க அணியும் இன்று முதல் போட்டியில் மோதுகின்றன.
அந்தவகையில் இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஒரு ஓட்டத்தைப்பெற்றபோது தாஹிரின் பந்தில் பெய்ஸ்ரே தான் எதிர்கொண்ட முதலாவது பந்திலேயே எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட் முறையில் டீகொக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
12 ஆவது உலகக் கிண்ண போட்டியில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை தாஹிர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இங்கிலாந்து அணி 5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை இழந்து 29 ஓட்டங்களை குவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM