உலகக் கிண்ணக் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 3 அணிகள் தான் சொந்த மண்ணில் சம்பியனாகி இருக்கின்றன. அதில் இலங்கையும் ஒன்று.
எந்த விளையாட்டாக இருந்தாலும் சொந்த மண் என்றால் தனியாக ஓர் உத்வேகம் இருக்கும். நம்பிக்கையுடன், உள்ளூர் ஆதரவும் இருக்கும் என்பதால் தான் அதற்கு இத்தனை கவனிப்பு.
ஐ.சி.சி. உலகக் கிண்ண வரலாற்றில் இதுவரை நடந்த 11 தொடர்களில் 3 முறை சொந்த மண்ணில் களம் கண்ட அணிகள் உலகக் கிண்ணத்தை தட்டிச் சென்றுள்ளன. இலங்கை, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் தான் இதனைச் சாதித்திருக்கின்றன.
1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின.
அப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் 2 ஆவது முறை உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்றது.
இலங்கையிலும் முதல் முறையாக இந்தத் தொடர் நடைபெற்றது. அந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன் படுத்திக் கொண்டது இலங்கை அணி.
லாகூரில் ஆஸி.க்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக உலகக் கிண்ணத்தை முத்தமிட்டது.
2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை நடத்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் திட்டமிட்டிருந்தன.
ஆனால் 2009ஆம் ஆண்டில் இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கினர். அதனால் பாகிஸ்தான், சர்வதேசப் போட்டிகளை தனது நாட்டில் நடத்தும் உரிமை பறிக்கப்பட்டது.
இதனால் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் நடத்தத் திட்டமிட்டிருந்தன.
இரு சொந்த மண் அணிகளான இந்தியா மற்றும் இலங்கை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. உலகக் கிண்ண வரலாற்றில் முதல் முறையாக இரு ஆசிய அணிகள் இறுதிப் போட்டியில் மோதியது இதுதான். இதில் இந்தியா வென்றது.
2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரு நாடுகள் நடத்தின. இரு அணிகளுமே 2015 உலகக் கிண்ண இறுதியில் மோத, ஆஸி. கிண்ணத்தை வென்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM