மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பு மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில், ஒன்பது குழந்தைகள் உள்பட, 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த குண்டு வீச்சுல், அங்குள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளது.
. சிரியாவில் பஷார் அல் அசாத் அரசுக்கு எதிராக, ஹயாத் தாஹிர் அல்ஷாம் என்ற பிரிவினைவாத அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த மாதத்தில் இருந்து இந்த அமைப்பு வலுவாக உள்ள பகுதிகளில் அரசுப் படைகளும் அதற்கு உதவும் ரஷ்ய படைகளும் தாக்குதலை நடத்தி வருகின்றன.
விமானம் மூலம் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 280க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
பிரிவினைவாத அமைப்பு வலுவாக உள்ள காப்ர் ஹலாப் பகுதியில், நேற்று முன்தினம், விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
, பீரங்கிகள் மூலமும் குண்டுகள் வீசப்பட்டதோடு. இத்தாக்குதலில், ஒன்பது குழந்தைகள் உள்பட, 20 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நடத்தப்படும் தாக்குதல்களினால் பொதுமக்கள் பலியாகின்றதாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM