யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் த. சத்தியமூர்த்தி நிரந்தரமாக (இடமாற்றங்களுக்கு உட்படாத இறுதி நிலைப் பதவியில்) சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அவர் ஓய்வூதியம் பெறும்வரை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்ற முடியும்.
மார்ச் 27 ஆம் திகதிய அமைச்சரவை அனுமதியுடன் இலங்கையில் உள்ள ஒன்பது வைத்தியசாலைகளுக்கு இவ்வாறு நிரந்தரப் (இடமாற்றம் அற்ற) பணிப்பாளர் பதவிக்கு சிரேஸ்ட வைத்திய நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு சீமாட்டி ரிச்வே சிறுவர் வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, யாழ் போதனா வைத்தியசாலை, அநுராதபுரம் போதனா வைத்தியசாலை, மட்டகளப்பு போதனா வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை, பேராதனை போதனா வைத்தியசாலைகளின் பணிப்பாளர் பதவிகளை இறுதி நிலைப் பதவிகளாக (End post) மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதில் கொழும்பு வடக்கு, தெற்கு, யாழ்ப்பாணம், கண்டி, பேராதனை வைத்தியசாலைகளில் தற்போதுள்ள பணிப்பாளர்கள் நிரந்தரமாகவே கடமையாற்றுவதோடு ஏனைய வைத்தியசாலைகளுக்கு விரைவில் புதிதாக நிரந்தரப் (இடமாற்றங்களுக்கு உட்படாத ) பணிப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM