அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் அந்த சூழலில் ஏற்படும் பணிச்சுமையின் காரணமாக அவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இதனை உலக சுகாதார நிறுவனமும் அங்கீகரித்திருக்கிறது.
அத்துடன் இதய பாதிப்பை ஏற்படுத்தும் பணிச்சுமையை அதாவது பணியிட சூழலில் ஏற்படும் மன உளைச்சலை உடனடியாக அகற்றிவிட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது.
பணியிட சூழலில் ஏற்படும் மன அழுத்தமானது, நாட்பட்ட உடலியல் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அவர்களுடைய பணித்திறன் இதன் காரணமாக வீணாக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர் வேலைப்பளுவின் காரணமாக பாதிக்கப்படும்போது அவர்கள் ஆற்றல் குறைவு உணர்வால் பாதிக்கப்படுகிறார்கள். பணியில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விலகி வெகு தூரம் சென்று விடுகிறார்கள். வேலையைப் பற்றிய எதிர்மறை எண்ணத்தையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் அவர்களுடைய உற்பத்தித் திறன், மனித வள திறன் பாதிக்கப்படுவதுடன்,அவர்களை சார்ந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.
அதனால் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏதேனும் பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டால் அதனை உடனடியாக அகற்றுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதனை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
வேலைப்பளுவின் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். புகை, மது ஆகியவற்றுக்கு அடிமையாகிறார்கள். அதே சமயத்தில் உடற்பயிற்சி செய்வதிலும் அக்கறை காட்டுவதில்லை. இதனால் தங்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுத்து தங்கள் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறார்கள்.
இதன் காரணமாக பதற்றம், எரிச்சல், ஆர்வமின்மை, தூக்கமின்மை, சோர்வு , பணியாற்றுவதில் இடையூறு, தலைவலி, வயிற்று உபாதைகள், சமூகத்துடன் சரியாக தொடர்பு கொள்ள முடியாத தன்மை என பல கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள். இதன் காரணமாக அவர்களின் இதயம் பாதிக்கப்படுகிறது.
இதனை களைய வேண்டும் என்றால், பணிச்சுமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் காலை உணவை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது. ஏனெனில் பணியிட சூழலில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் முக்கிய காரணமாக பசி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் உறக்கத்தையும் சரியான முறையில் பேண வேண்டும். தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன் காரணமாக உடலில் என்டார்பின் எனப்படும் ஹோர்மோன் சுரப்பி சரியான அளவில் சுரந்து மகிழ்ச்சியான மனநிலையை பராமரிக்கும் என பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.
டொக்டர் அனந்தகிருஷ்ணன்.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM