(செ.தேன்மொழி)
பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் சேவைக்கு இடையூறு விளைவித்தாகவும் அவரது கையை காயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டப்பட்ட சட்டதரணி ஒருவர் வாழைத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் சேவைக்கு இடையூறு செய்ததோடு, சோதனையில் ஈடுபடும் போது அவரது கையை காயப்படுத்திய பெண் சட்டத்தரணியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நீதவான் நீதிமன்றத்தினுள் பிரவேசிக்க முட்பட்ட பெண் சட்டதரணியை குறித்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் சோதனையிட முட்பட்டுள்ளார். இதன்போது குறித்த சட்டதரணி தன்னை சோதனைக்குட்படுத்த வேண்டாம் என்றுக் கூறி, பொலிஸ் அதிகாரியை தாக்கி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பெண் பொலிஸ் அதிகாரி வாழைத்தோட்ட பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததற்கிணங்க சட்டதரணி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். பின் பொலிஸார் இவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவரை கைது செய்துள்ளனர்.
பொலிஸார் சந்தேக நபரான சட்டதரணியை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM