வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அதிகாலையில் பல மணி நேரமாக வைத்தியாசலைக்கு வெளியில் வீதியோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,
வவுனியா பொது வைத்தியசாலைக்கு பல்வேறு பிரதேசத்திலிருந்தும் பொது மக்கள் சிகிச்சைக்காக வருகின்றமை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.
இந்நிலையில் அண்மைய அசம்பாவிதங்களுக்கு பின்னர் கடும் சோதனைக்கு பின்னரே வைத்தியசாலைக்குள் செல்ல நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் வைத்தியாலையில் நோயாளிகளை பார்வையிடுவதற்கு 6 மணியளவிலேயே அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பார்வையாளர்கள் வீதியோரத்தில் 6 மணி வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தொடர் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளையும் வைத்தியசாலைக்குள் அனுமதிக்காத நிலை காணப்படுவதுடன் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளும் பார்வையாளர்களுடன் வீதியோரத்திலே 6 மணி வரை காத்திருந்த பின்னரே அனுமதிக்கப்படுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே நோயாளிகள் பல கிலோ மீற்றர் தூரங்களிலிருந்தும் வருவதனாலும் அவர்களின் நலன் கருதியும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை வைத்தியசாலைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கின்றனர். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் கவனமெடுத்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM