(எம்.எப்.எம்.பஸீர்)
பாதுகாக்கப்பட்ட வில்பத்து சரணாலயத்தின் காட்டுப் பகுதியில் உள்ளதாக கூறப்படும் சட்டவிரோத குடியிருப்புக்களை அகற்ற உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பை அறிவிக்க மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி மஹிந்த சமரவர்தன விருப்பமின்மையை வெளியிட்டதால் அந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த இந்த ரீட் மனு,மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி மஹிந்த சமரவர்தன முன்னிலையில் விசாரிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி தீர்ப்பறிவிக்கப்படவிருந்தது.
இந்நிலையில் அந்த தீர்ப்பை அறிவிக்க குறித்த நீதிபதி விருப்பமின்மையை வெளியிட்டதால், அந்த மனுவை மீள ஆரம்பத்திலிருந்து விசாரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி முடிவு செய்துள்ளார்.
அதன்படி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல், ஆரம்பத்திலிருந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
வில்பத்து வனத்தை அண்மித்த பகுதிகளிலுள்ள 100 ஏக்கர் நிலப்பரப்பில் முஸ்லிம் மக்களை குடியமர்த்துவதற்காக சட்டவிரோதமாக காணிகளை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சியை தடுத்துநிறுத்துமாறு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஜனக்த சில்வா மற்றும் நிஷங்க பந்துல கருணாரத்ன ஆகியோர் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே மீள விசாரணைக்காக குறித்த வழக்கு எடுக்கப்படுவது குறித்து அறிவிக்கப்பட்டது.
2015 இல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வனவளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், வன பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் கடந்த வருடம் நிறைவு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது மீள விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
தீர்ப்பு வழங்க திகதி குறிப்பிடுவதற்கு முன்னர் ஏற்கனவே 4 தடவைகள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமரவர்தன வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM