புரா­தன விநா­யகர் ஆல­யத்­தை ஆக்­கி­ர­மித்து விகாரை அமைப்­பது அநீ­தி­யான செயற்­பாடு

Published By: Digital Desk 4

29 May, 2019 | 11:28 AM
image

கன்­னியா வெந்நீ­ரூற்று, புரா­தன விநா­யகர் ஆல­யத்­தை ஆக்­கி­ர­மித்து விகாரை அமைக்கும் செய­லுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து மாமன்றம் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்ள­தா­வது;

ஆண்­டுகள் பல கடந்­தாலும், ஆட்­சிகள் பல மாறி­னாலும் இந்நாட்டில் வாழும்­இந்­துக்கள் மீது மத ­ரீ­தி­யாக ஏதோ ஒரு வகையில் அடக்­கு­மு­றை­களும் துன்­பு­றுத்­தல்­களும் அதர்­ம­மான செயல்­களும் நடந்து கொண்­டே­யி­ருக்­கின்­றன.

இந்­நாட்டின் அர­சாங்கம் 2015ஆம் ஆண் டில் நல்­லாட்சி என்ற வாச­கத்­துடன் ஆட்­சிப் ­பொ­றுப்­பி­ல­மர்ந்­த­ போது, இந்­நாட்டில் நல்­லி­ணக்கம் உரு­வாகி சமா­தான சக­வாழ்வு மலரும் என்ற பெரும் நம்­பிக்கை தமிழ் மக்­க­ளுக்கு இருந்­தது. ஆனால் அரசோ, அரச நிறு­வ­னங்­களோ செயற்­பட்டு வரும் முறை­யா­னது, தமிழ் மக்­களின் அந்த நம்­பிக்­கையைக் குறைத்து இல்­லாமற் செய்­வ­து­போல் உள்­ளது. ஈழத்­தி­ரு­நாட்டின் பல­ ப­கு­தி­க­ளிலும் இந்­து­ மத தொன்­மைச்­ சின்­னங்கள் காணப்­ப­டு­கின்­றன. அச் சான்­றுகள் காலத்­துக்கு முந்­ திய வர­லாற்றைப் பறை­சாற்றி நிற்­கின்­றன. இவற்­றை­யெல்லாம்  மாற்­றி­ய­மைத்து, அவற்றைப் பௌத்த சின்­னங்­க­ளாக திரி­பு­ப­டுத்தி, வர­லாற்றை மாற்றும் கைங்­க­ரி­யத்தை தொல்­லியற் திணைக்­களம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 

ஓர் அரச திணைக்­களம் என்ற வகையில் அது, இந்நாட்டு மக்­க­ளுக்கு இன-­, ம­த,-­மொழி வேறு­பா­டின்றிச் செய­லாற்ற வேண்­டி­யது சட்­டத்­தின்­படி கட்­டா­ய­மா­ன­தாகும். 

தொல்­லியல் திணைக்­களம் ஆக்­கி­ர­மித்­துள்ள இந்து ஆல­யங்கள் மற்றும் தமி­ழரின் புரா­தன வாழ்­வி­டங்கள் தொடர்பில் பல ­த­ட­வைகள் அர­சுக்கு முறை­யிட்டும் அர­சாங்­கமும் பாரா­மு­க­மாக இருந்து வரு­கின்­றது. இது எமது மக்­களை வேத­னை ­கொள்ளச் செய்­துள்­ளது.

திரு­கோ­ண­மலை சிவன் ஆலயம், கன்­னியா வெந்நீ­ரூற்­றுகள் ஆகிய கிழக்­கு­ மா­காண இடங்­க­ளிலும், வடக்கில் மன்னார் திருக்­கே­தீச்­சரம், செம்­மலை நீரா­வி­ய­டிப்­ பிள்­ளையார் ஆலயம், வெடுக்­கு­நா­ரி­மலை எனப் பல வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடங்கள் தொல்­லியல் திணைக்­க­ளத்தால் பட்­டி­யற்­ப­டுத்­தப்­பட்டு, அங்கு பௌத்த விகா­ரைகள் அமைப்­ப­தற்கு திணைக்­களம் நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ உத­வி ­வ­ரு­கின்­றது.

இந்­த­ வ­கை­யில்தான், திரு­கோ­ண­மலை, கன்­னியா வெந்நீ­ரூற்று பிள்­ளை­யார் ­கோவில் அமைந்­துள்ள காணியும் தொல்­லி­யல் ­தி­ணைக்­க­ளத்தால் புரா­தன இட­மாக பட்­டி­யற்­ப­டுத்­தப்­பட்டு அந்தப் பிள்­ளையார் கோவில் கட்­டிட வேலை­க­ளுக்கு தடைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அதே­வேளை, அரு­கி­லுள்ள வில்கம் விகா­ரா­தி­பதி  தலை­மையில் அந்தக் காணியில் அடாத்­தாக குடி­யேறி விகாரை அமைக்கும் பணி­களில் மும்­மு­ர­மாக ஈடுபட்டு வருகின்றனர். 

இச்செயற்பாடுகள் தொடர்பில் அகில இலங்கை இந்து மாமன்றம் தனது வன்மையான கண்டனங்களைத் தெரி விப்பதுடன், எமது உரிமைகளை மீட்டு எமது பாரம்பரிய சின்னங்களைப் பேணுவதற்கு மாமன்றம் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்காது என்பதையும் தெரி வித்துக் கொள்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01