சீனாவுடன் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு அமைய, இலங்கை இராணுவ மற்றும் காவல்துறையைக்கொண்ட முதலாவது அணி பயிற்சிக்காக அடுத்த வாரம் பீஜிங் செல்லவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய சீனப் பயணத்தின்போது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் நடத்திய பேச்சுக்களையடுத்து, மே 14ஆம் திகதி இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
திட்டங்கள் முன்னெடுக்கப்படும் இடங்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களைக் கொண்டதாக இந்தப் பயிற்சிகள் அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சீன தூதரக பேச்சாளர் ஒருவர் தகவல் வெளியிடுகையில்,
“இலங்கை படையினரின் மற்றும் பொலிசாரின் ஆற்றலைக் கட்டியெழுப்பும் உதவிளையும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கருவிகளையும் சீனா வழங்கும்.
காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினரின் முதல் தொகுதியினருக்கான பயிற்சித் திட்டம் அடுத்தவாரம் ஆரம்பமாகும்.
நாங்கள் எமது இராணுவத்தினரை இங்கு அனுப்பப் போவதில்லை.அதற்குப் பதிலாக, இலங்கை படையினரின் ஆற்றலை கட்டியெழுப்பவுள்ளோம்.
எமது பாதுகாப்பை அவர்கள் மேற்கொள்வார்கள் என்று நம்புகிறோம். எனவே, எமது படையினரை இங்கு அனுப்ப வேண்டிய தேவை இல்லை. இது எமது கொள்கை இல்லை. இதற்கு மேலதிகமாகவும் எம்மிடம் பயிற்சி வாய்ப்புகள் உள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM