(எம்.எப்.எம்.பஸீர்)
டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட் டுவரும் பிரபல பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூ ஷிடம் எஸ்.ரி.எப். எனப்படும் பொலிஸ் விஷேட அதிரடிப் படை சிறப்பு வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான விடயங்களை உள்ளடக்கி இந்த வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக அதிரடிப் படையின் பாதாள உலக ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகரை ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் வைத்து கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் என்றழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிகே மதுஷ் லக்ஷித டுபாயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 05 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அதனையடுத்தே சி.ஐ.டி. அவரை பொறுப்பேர்று கைது செய்து விசரைத்து வருகின்றது. பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இந் நிலையில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதுஷிடம் எஸ்.ரீ.எப். முன்னெடுத்த விசாரணைகளுக்கு மேலதிகமாக ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM