(ஆர்.யசி)
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்ந்து அறிக்கையிட பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள விசேட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முதல் கூட்டம் இன்று இடம்பெறுகின்றது.
பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன, இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க, பாதுகாப்பு செயலாளர் எஸ்.எச்.எஸ். கோட்டேகொட மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் ஆகியோர் இன்றைய கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 21 ஆம் திகதி புனித உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிரதான ஹோட்டல்கள் உள்ளிட்ட எட்டு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதல் குறித்து உண்மைகளை கண்டறியவும் அது குறித்து அறிக்கையிடவும் விசேட தெரிவுக்குழுவை சபாநாயகர் கரு ஜெயசூரிய கடந்த பாராளுமன்ற அமர்வுகளின் போது நியமித்திருந்தார்.
இந்த பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் முதல் அமர்வுகள் இன்று காலை 9 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடுகின்றது. காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரையில் தெரிவுக்குழு கூட்டங்கள் இடம்பெறவுள்ளது.
மேலும் ஆளும் - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாற்பது பேரை உள்ளடக்கிய பாராளுமன்ற தெரிவுக்குழு ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட போதிலும் கூட இந்த தெரிவுக்குழு நியாயமாக செயற்படவும், உண்மைகளை கண்டறியவும் அமைக்கப்படவில்லை என கூறி எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷவின் அணியான பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவுக்குழுவில் இருந்து விலகிக்கொண்டனர்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் இருந்துகொண்டு தெரிவுக்குழுவில் பங்குகொள்ள முடியாது என்பதை அவர்கள் சபையில் தெரிவித்திருந்தனர். ஆகவே பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவுக்குழுவில் பங்குகொள்ள மறுத்ததை அடுத்து பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் ஒன்பது பேர் கொண்ட தெரிவுக்குழுவை சபாநாயகர் கடந்த பாராளுமன்ற அமர்வுகளின்போது நியமித்தார்.
தெரிவுக்குழு உறுப்பினர்கள்
இதில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரவூப் ஹகீம், ரவி கருணாநாயக்கவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகா, எம்.எ.சுமந்திரன், ஜயம்பதி விக்ரமரத்ன, ஆசு மாரசிங்க, நலிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுமத்திரன் தனிப்பட்ட ரீதியில் வெளிநாட்டு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள நிலையில் அவர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்.
இன்றைய கூட்டத்திற்கான அழைப்பு
இன்று முதல் கூட்டத்தில் கடந்த 21 ஆம் திகதி சம்பவங்கள் குறித்த எந்த விசாரணைகளும் இடம்பெறாது. மாறாக தாக்குதலின் பின்னர் இதுவரையிலான காலகட்டம் வரையில் நாட்டின் பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து ஆராயும் வகையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன, இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க, பாதுகாப்பு செயலாளர் எஸ்.எச்.எஸ். கோட்டேகொட ஆகியோர் தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்படுவதுடன் கடந்த 21 ஆம் திகதி தாக்குதல் குறித்து ஆராய ஜனாதிபதி பிரத்தியேகமாக நியமித்த விசாரணை குழுவின் உறுப்பினர் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோனும் அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி விசாரணைக் குழுவின் நகர்வுகள் மற்றும் அவர்களின் இடைக்கால அறிக்கை குறித்து அவர் இன்று தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM