வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கச் சென்ற முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் இராணுவத்தினரால் இன்று திருப்பி அனுப்பப்பட்டனர்.
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து நீர்கொழும்பிலிருந்து அழைத்து செல்லப்பட்டு வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக ஒரு பகுதியினர் பூந்தோட்டம் முகாம் பகுதிக்கு சென்றிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள முறிப்பு கிராமத்த்தில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கம் என்பவற்றைச் சேர்ந்த 11 பேர் அடங்கிய குழுவினரே இவ்வாறு சென்றிறுந்தனர்.
வவுனியா நகரிலிருந்து மூன்று முச்சக்கர வண்டியில் நிவாரணப் பொருட்களுடன் அவர்கள் சென்ற நிலையில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம் பகுதியில் மேலதிக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்பட்டதுடன், வருகை தந்தவர்களின் விபரங்களைப் பெற்றுக் கொண்ட இராணுவத்தினரும், பொலிசாரும் அவ்வாறு நிவாரணப் பொருட்களை வழங்க முடியாது எனத் தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதன்போது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்தானிகராலயத்தின் அனுமதி பெற்று அவர்கள் ஊடாக பொருட்களை வழங்குமாறும் இப்பகுதிக்குள் எவரையும் உட்பிரவேசிக்க விட முடியாது என இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் முல்லைத்தீவு, முறிப்பு கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில், உறவினர்கள் அற்ற நிலையில் ஏதிலிகளாக தஞ்சம் கோரியுள்ளவர்களுக்கு உலர் உணவு வழங்கி அவர்களை பார்வையிடுவதற்காக 92 கிலோமீற்றர் தூரத்தில் இருந்து வந்தோம்.
இராணுவமும், பொலிசாரும் எம்மை அவர்களை சந்திக்க விடாது திருப்பி அனுப்பி விட்டனர். அகதிகளைப் பார்வையிடுவதும் அவர்களுக்கு உதவுவதும் மனித உரிமை ஆகும். ஆனால் அதற்கு இடமளிக்கப்படவில்லை. எனவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதேவேளை, வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் 35 வெளிநாட்டு அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM