இதய பாதிப்பு, சர்க்கரை நோய், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு நாளுக்கு நாள் தெற்காசியா முழுவதும் அதிகரித்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இத்தகைய தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்தினர் உயிரிழக்கக்கூடும் என்று சர்வதேச வைத்திய ஆய்வு நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.
புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான அதி நவீன புரோற்றான் டிஜிற்றல் பி. இ. டி. கருவி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய கருதி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது தெற்காசியாவிலேயே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்காசியா முழுவதும் இதயநோயால் பிள்ளைகளும், வளர் இளம் பருவத்தினரும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். 15 வயது முதல் 20 வயது வரையிலான இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதய பாதிப்பு சர்க்கரை நோய் புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு குறித்து மக்கள் போதிய அளவிற்கு விழிப்புணர்வை பெற வேண்டும்.
கடந்த காலங்களில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்கான வசதிகள் அதிகளவில் இல்லை. ஆனால் தற்போது அந்த நிலை மாறி விட்டது. இதற்கான வைத்திய வசதிகளும் தெற்காசிய முழுமைக்கும் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் இளம் வயதினரும், பதின்ம வயதில் உள்ளவர்களும் இத்தகைய முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இதன்மூலம் தொற்றா நோய்களின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM